கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் நிவாரண பொருட்களை வழங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 15 முதல் 25ம் தேதி வரை தேர்வு நடைபெறும். அதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, பள்ளி கல்வித்துறை மூலமாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது.அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தினால் கடுமையான நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை
- கடுமையான நடவடிக்கைக்கான மாணவர் சேர்க்கைகளில் மீறல் குறித்த மாநில உத்தரவு
- Senkottaiyan
- தனியார் பள்ளிகள்