கூடலூர்: முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்கு கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியது. இப்பணி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கார்குடி, முதுமலை, தெப்பக்காடு ஆகிய 3 சரகங்களில் உள்ள 32 தேர்வு செய்யப்பட்ட மைய பகுதிகளில் இருந்து இப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.