புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கபட்ட ஊரடங்கினால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வேறு பணியிடங்களுக்கு செல்வதில் இருக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு வரும் 2021 மார்ச் வரை பணியிட மாற்றங்களை மேற்கொள்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படையின் இயக்குனர் ராஜேஷ் ரஞ்சன் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்று நேரத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் நிர்வாகம், செயல்பாடு, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியிட மாற்றமில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.