புதுச்சேரி: உலகையே புரட்டி போட்டுள்ளது கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொரோனா என்ற பெயர் தாங்கிய 4 புதிய வால்வோ பேருந்துகள் பதிவு செய்வதற்காக புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. அதுசமயம் தேசிய ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் அப்பேருந்துகள் அனைத்தும் சீகல்ஸ் ஓட்டலை ஒட்டியுள்ள பழைய துறைமுக பகுதியில் காலியிடத்தில் நிறுத்தப்பட்டன. பஸ்சில் கொரோனா என்ற பெயர் இடம்பெற்றிருந்தது. 56 நாளாக ஊரடங்கு தொடரும் நிலையில் அந்த பஸ்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சீனாவில் 2019ல் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இந்நோயின் பெயர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தின.