முல்லைப் பெரியாறு அணை அருகே லேசான நில அதிர்வு

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை அருகே நேற்று அதிகாலை லேசான நில அதிர்வு  ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் இது 2.5 ஆக பதிவாகி இருந்தது. இடுக்கி மாவட்டம்  நெடுங்கண்டம் அருகே உள்ள தூக்கு பாலம் என்ற  இடத்திலும் நிலஅதிர்வு லேசாக  உணரப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். ஆனால் இந்த நில  அதிர்வு காரணமாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories: