கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் பாலிவுட் நடிகைகள் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்து வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா அமெரிக்கா வாழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு கோடி கணக்கில் உதவி வருகிறார். ஊர்வசி ரத்தோல் நடனம் ஆடி 5 கோடி நிதி வசூல் செய்து கொடுத்தார். அந்த வரிசையில் தமிழில் லிங்கா படத்தில் நடித்தவரும் பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா ஓவியம் வரைந்து அதன் மூலம் நிதி திரட்டப்போவதோக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் என்னுடைய நண்பர்களை சந்திக்க முடியாமல் தவிக்கிறேன். ஆனால் வேறொரு கோணத்தில் சிந்திக்கும்போது இது ஒரு பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பது எனக்குச் சவாலானதாக இருக்கவில்லை.