சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சர்க்கான் தெருவில் வசித்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்னையில் சாலையோர கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை அடையார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார் அப்போது அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் அங்கிருந்து சொந்த ஊரான சீர்காழி வந்து விட்டார். இந்நிலையில் சீர்காழியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மதுபான வாங்கி அருந்தியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மதுபானம் வாங்கி சென்றதாக கூறப்படும் சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.