வேலூர்: 108 வைணவ தலங்களில் கடிகாசலம் என்று போற்றப்படும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. செங்குத்தான குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயிலுக்கு 1305 படிகளை கடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். இதனால் வயதானவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2001ம் ஆண்டு நன்கொடையாளர்கள் மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் இருந்து கடன் பெற்று ரோப்கார் அமைக்க திட்டமிடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆரம்பத்தில் ரூ.3 கோடியில் திட்டமிடப்பட்ட இப்பணி பல்ேவறு காரணங்களால் தடைப்பட்டு தற்போதைய நிலையில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. இப்பணியை வடமாநிலத்தை சேர்ந்த தனியார் பொறியியல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோயில் ரோப்கார் அமைக்கும் பணியில் தொய்வு: பக்தர்கள் வேதனை
- ஷோலிங்கர் நரசிம்ம சுவாமி கோயில் ரோப்லேகர்
- ஷோலிங்கர் நரசிம்ம சுவாமி கோயில் ரூப்கர்
- சொந்த ஊரான தொழிலாளர்கள் வீட்டிற்கு வடக்கு பிராந்திய தொழிலாளர்களை நகர்த்தவும்