சென்னை: வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களில் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கொரோனா அச்சத்தில் இருப்பதோடு, போதிய பொருளாதார வசதியும் இன்றி சிரமப்படுகிறார்கள். இவர்கள் தமிழகம் திரும்ப அனுமதி கேட்டிருப்பினும் இன்னும் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களின் குடும்பங்கள் வேதனையில் இருக்கின்றனர்.