அரக்கோணத்தில் வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்ததால் பரபரப்பு

அரக்கோணம்: அரக்கோணம் ரத்தினம் தெரு பகுதியில் நேற்று காலை வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று வேகமாக வந்து குடியிருப்பு பகுதியில்  விழுந்தது. அதைபார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். தகவல்அறிந்த அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மர்ம  பொருளை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர், வானில் இருந்து கீழே விழுந்த பொருள் வானிலையை கணக்கிடும் கருவியா  அல்லது வேறு எதுவாக இருக்கலாம் என போலீசாரும், வருவாய் துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே, கொரோனா பிரச்னையால்  மக்கள் அச்சமடைந்த நிலையில் திடீரென வானில் இருந்து ஒரு மர்ம பொருள் கீழே விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: