மீனாட்சிசுந்தரம் காலமானார் மு.க.ஸ்டாலின், ராமதாஸ் இரங்கல்

வேதாரண்யம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர், பாவலர் க.மீனாட்சிசுந்தரம் (90). நாகை மாவட்டம் வேதாரண்யம்  அடுத்த தலைஞாயிறை சேர்ந்தவர். உடல்நலக்குறைவால் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று மதியம்  மாரடைப்பால் காலமானார். அவரது உடல் தலைஞாயிறில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு  நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில்,  கலைஞர் பக்கம் எப்போதும் அசைத்துப் பார்க்க முடியாத எஃகுத் தூணாக  நின்றவர்.

‘ஜேக்டோ- ஜியோ’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக, ஆட்சியிலிருப்போருக்கு ‘சிம்ம சொப்பனமாக’ இருந்தவர். அவரது மறைவில் ஆசிரியர்களும்,  அரசு ஊழியர்களும் தங்களிடமிருந்த ‘கலங்கரை விளக்கை’ இழந்து ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ளார்கள். நானோ, திமுகவின் தீரமிக்க  வீரரை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: