வேதாரண்யம்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர், பாவலர் க.மீனாட்சிசுந்தரம் (90). நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறை சேர்ந்தவர். உடல்நலக்குறைவால் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் தலைஞாயிறில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு நடக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், கலைஞர் பக்கம் எப்போதும் அசைத்துப் பார்க்க முடியாத எஃகுத் தூணாக நின்றவர்.