சென்னை: மஸ்கட், சிகாகோ நகரிலிருந்து இரண்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு தனி விமானங்களில் 324 இந்தியர்கள் சென்னை வந்தனர்.ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு தனி விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் 183 இந்தியர்கள் இருந்தனர். இவர்களில் ஆண்கள் 106, பெண்கள் 50, குழந்தைகள் 27. அனைவரையும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். பின்பு சமூகஇடைவெளியில் அவர்களை வரிசைப்படுத்தி மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன. அதன்பின்பு நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவர்கள் வெளியே அழைத்துவரப்பட்டு தனி பஸ்களில் தனிமைப்படுத்தும் இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.