புதுடெல்லி: வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்புவதை உறுதிப்படுத்தவும், அவர்களின் வங்கி கணக்கில் 7,500 செலுத்தும்படியும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதுமான ஊரடங்கினால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலையிழந்து, உணவின்றி தவிக்கின்றனர். அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுகிறன்றன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி அவர்களே, வெளிமாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகள் நடைபயணமாக தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் ஊருக்கு பாதுகாப்பாக திரும்புவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.