ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி (74). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சட்டீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக பதவி வகித்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2016ல், ‘ சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ்’ என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ராய்ப்பூரில் உள்ள நாராயணா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கோமா நிலையில் உள்ளார். அவருடைய நரம்பு மண்டலம் முழுமையாக செயலிழந்து விட்டது.