சென்னை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமானத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி இங்குள்ள அவர்களின் பெற் றோர்களும், இப்போதுள்ள நோய்த்தொற்று பிரச்னை காரணமாக மிகுந்த கவலையுடன் உள்ளனர். அமெரிக்காவில் தவித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்தும், அவர்களின் பெற்றோர் மட்டும் குடும்பத் தார்களிடமிருந்து எனக்கு ஏராளமான வேண்டுகோள் கள் வந்தவண்ணம் உள்ளன. நியூயார்க், நியூ ஜெர்ஸி உள்ளிட்ட பெரு நகரங்களிலிருந்து இந்திய மாணவர்கள் மற்றும் மென் பொருள் வல்லுநர்கள் தங்களின் பாதுகாப்பு குறித் தும், இந்தியா திரும்புவது குறித்தும் பெரும் கவலையு டன் உள்ளனர்.