கொடைக்கானல்: கொரோனா ஊரடங்காலும், கொளுத்தும் வெயிலாலும் கொடைக்கானலில் நகர் மற்றும் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. கோடைக்காலம் தொடங்கியவுடன் நகரில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்து இல்லாமல், சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லை. மேலும், கடந்த சில நாட்களாக வெயிலும் கொளுத்தி வருகிறது. நேற்று காலை முதல் நகரில் வெயில் கொளுத்தியது.