சென்னை: ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. பூந்தமல்லி டிரங்க் சாலையில் அரசு தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினசரி பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு ெபாது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், சுகாதாரத் துறையினரால் மருத்துவமனை முழுவதிலும் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இந்த அரசு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.