கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கன்னிவாக்கம் கிராமம், தர்காஸ் நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (48). இவர், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு, மனைவி புவனேஸ்வரி (45), மகன் கோகுல் (15), மகள் லாவண்யா (12) ஆகியோர் உள்ளனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பூ வியாபாரி வாசு (27) என்பவரிடம் விநாயகம் ஏற்கனவே பணம் கடனாக வாங்கியிருந்தார்.