அகமதாபாத்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்பேரில் எய்ம்ஸ் இயக்குனர் குஜராத் விரைந்துள்ளார். நாட்டிலேயே கொரோனா நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. இங்கு 7402 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 449 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 390 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 1872 பேர் குணமடைந்துள்ளனர்.