தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 3 டாஸ்மாக் கடைகளில், காலாவதியான பீர் விற்பனை செய்யப்பட்டதால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தர்மபுரி மாவட்டம் முழுவதும், 65 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஊரடங்கின் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கடைகளில் இருந்த மதுபானங்கள், திருமண மண்டபம் மற்றும் குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், 44 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. நேற்று முன்தினம், ஒரே நாளில் ₹3.70 கோடிக்கு மது விற்பனை ஆனது. தொடர்ந்து 2வது நாளான நேற்று மதுவிற்பனை சூடுபிடித்தது. இந்நிலையில், நேற்று பாப்பாரப்பட்டியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் காலாவதியான பீர் விற்பனை செய்யப்பட்டது.