கபூர்தலா: பஞ்சாப் மாநிலத்தில் தன்னை தாக்க வருவதாக கருதி உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் சர்வதேச கபடி வீரர் அரவிந்தர்ஜித் சிங் கொல்லப்பட்டார்.
கபூர்தலா மாவட்டத்தில் உள்ள லகான் கே படா கிராமத்தில் தனது நண்பரை விட்டு வருவதற்காக உதவி ஆய்வாளர் பரம்ஜித் சிங் நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார். அப்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எதிரே கார் ஒன்று வருவதைக் கவனித்தார். காரை நிறுத்தும்படி அவர் சைகை காட்டினார். காரில் இருந்து சர்வதேச கபடி வீரர் அரவிந்தர்ஜித் சிங், அவரது நண்பர் இறங்கினர். அவர்கள் போலீசாரை நோக்கி ஓடி வந்துள்ளனர்.