தெலங்கானாவில் கொரோனா அச்சுறுத்தல் குறையத்தொடங்கி போக்குவரத்து தொடங்கப்பட்டு இருப்பதால், தனது பண்ணையில் தங்கியிருப்பவர்களின் சொந்த ஊர் பயணத்துக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசினார் நடிகர் பிரகாஷ்ராஜ். தேசிய ஊரடங்கு தொடங்கியது முதல் எனது பண்ணையில் இருந்த 31 குடிமகன்களின் பாதுகாப்பான பயணத்துக்கு அதிகாரிகளிடம் பேசினேன். அவர்களுக்கு உறுதுணையாக இருந்ததில் மகிழ்ச்சி. இன்னும் முடிந்துவிடவில்லை. போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. தேவைகள் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்வேன். மனிதத்தை கொண்டாடுவோம். வாழ்வுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்று சொன்ன பிரகாஷ்ராஜ், அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று தெலங்கானா அரசு பயணத்துக்கு உதவி செய்துள்ளது.