மயிலாடுதுறை: டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை அடுத்து மயிலாடுதுறையில் ஏற்கனவே இருந்த 4 கடைகளில் ஒரு கடையை தவிர 3 கடைகள் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடந்தது.மயிலாடுதுறை பஸ் நிலையங்களை ஒட்டி 2 கடைகள், மகாதானத்தெருவில் ஒரு கடை என 3 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் கடை முன்பாக அமைக்கப்பட்ட தடுப்பு மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர். மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடையில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் காலை 10 மணி முதலே மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. யாரும் பேரம் பேசவில்லை.