சென்னை: சென்னையில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது. அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உள்பட 4 பேர் இன்று பலியாகி உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் மிக அதிக அளவாக சென்னையில் பாதிப்பு உள்ளது.