வாஷிங்டன் : கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பௌசி தெரிவித்துள்ளார்.சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் வௌவால்கள் மூலம் வேறு விலங்கிற்கு பரவி அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுகான் நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே பரவியதாகவும் கணிப்பில் கூறப்பட்டு வந்தன. ஆனால் இந்த வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது சீனாவிலுள்ள வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்தது என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார்
'கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று தான்' : சீனா மீதான அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்
- டிரம்ப்
- கொரோனா
- சீனா
- முடிசூட்டு பரவியது
- அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம்
- அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்கள்