கொடைக்கானல்: கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் கொடைக்கானலில் மலைவாழைக்காய்கள் தேக்கமடைந்துள்ளன. சந்தைப்படுத்த முடியாததால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.கொரோனா பரவலால் விவசாயமும் கடுமையாக முடங்கி உள்ளது. தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், பல இடங்களிலும் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. மலைக்காய்கறிகளுக்கு பிரதானமாக உள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை பொருத்தவரையில், இங்கு விளையக்கூடிய மலை வாழைக்காய்களை நேரடியாக கோயம்பேட்டிற்கு தான் அனுப்புவார்கள். கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான வடகவுஞ்சி, பாச்சலூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழை விவசாயிகள் உள்ளனர்.