செங்கல்பட்டு: சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து மதுரைக்கு லாரியில் பயணித்த 25 பேரை செங்கல்பட்டு சோதனை சாவடியில் போலீசார் மடக்கியுள்ளனர். செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது லாரி ஒன்றில் 25 பேர் இருந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோயம்பேடு சந்தையில் முட்டை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி, பழம் வியாபாரம் செய்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் பணி புரிந்த தொழிலாளர்கள் லாரி மூலம் மதுரைக்கு தப்ப முயற்சி..: செங்கல்பட்டில் 25 பேர் சிக்கினர்
- சந்தை
- கோயம்புத்தூர்
- செங்கல்பட்டு
- மதுரை
- லாரி கோயம்பேடு தொழிலாளர்கள் சந்தையில் வேலைசெய்து மதுரை தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்