சென்னை: தமிழக அரசு நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையொட்டி பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா, தலைமைக்கு?” என்று கேட்டுள்ளார்.