கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதுார் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மண்பாண்டத்தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள், களிமண்ணால் பானை, குடம், கூஜா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரி–்த்து விற்பனை செய்து வருகின்றனர்.இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் இவர்கள் தயாரித்து வைத்துள்ள பானைகளை விற்க முடியாமல் காத்துக் கிடக்கின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக மண்பாண்டத்தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைய அல்லது பொருட்களோ வழங்க வேண்டும். தேங்கியுள்ள மண்பாண்டங்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.