சென்னை: தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக 8,538 பேர் தேர்வாகினர். மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் புதிதாக தேர்வான காவலர்களுக்கு பயிற்சி அளித்து உடனே பணியில் ஈடுபடுத்த தமிழக காவல்துறை முடிவு செய்தது. அதன்படி, காவலர் பயிற்சி பள்ளி டிஜிபி கரண் சின்கா, புதிதாக தேர்வான அனைவரும் மாவட்ட கண்காணிப்பு மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், அப்படி பயிற்சி வகுப்புக்கு வரும் காவலர்கள் அனைவரும் சளி மற்றும காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகுதான் பயிற்சி வகுப்பில் சேர்க்கப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
காவல் துறையில் புதிதாக தேர்வாகி பரங்கிமலை பயிற்சி பள்ளிக்கு வந்த 8 பெண் காவலர்களுக்கு கொரோனா
- போலீஸ்காரர்கள்
- கொரோனா
- போலீஸ் படை
- புதியவர்களை
- பரங்குமலை பயிற்சி பள்ளி
- பரங்குமலை பயிற்சி பள்ளிக்கு வந்த 8 பெண் போலீஸ்காரர்களுக்கு கொரோனா
- பொலிஸ் படையில் புதியவர்