சேலம்: கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் உடலை அடக்கம் செய்ய என்னுடைய நிலத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை வீரர் செல்வ ராமலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் கொரோனா வைரஸ்வால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமனின் இறுதிச் சடங்கின் போது நிகழந்த தூயர சம்பவத்தை மன சேதனை அடைந்த செல்வ ராமலிங்கம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அதில் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் சடலத்தை புதைக்கவோ, இறுதிச் சடங்கு செய்யவோ தனது நிலத்தை பயன் படுத்திக் கொள்ளலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.