மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதமாக மழை இல்லாததாலும், கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 150 கன அடிக்கும் குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 27ம் தேதி விநாடிக்கு 350 கன அடியாக இருந்த நீர்வரத்து, மறுநாள் 1000 கன அடியாக அதிகரித்தது.