போர்ட் பிளேயர்: அந்தமான் நிகோபர் தீவுகளில் சிக்கி தவிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களை அழைத்து செல்ல, போர்ட் பிளேயரில் இருந்து சென்னைக்கு சிறப்பு கப்பல் இயக்கப்படும் என்று அந்தமான் நிகோபர் அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தமான் நிகோபர் அரசின் கப்பல் போக்குவரத்துத் துறையின் துணை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போர்ட் பிளேயரில் இருந்து சென்னை செல்ல விரும்புவோர் இன்று மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் கப்பல் மூலம் இங்கிருந்து சென்னைக்கு ஒரேயொரு முறை ஒரு வழிப்பயணமாக மட்டுமே அழைத்து செல்லப்படுவார்கள். இவர்கள் தங்களது பெயர், வயது, பாலினம், வசிப்பிடம், சேருமிடம், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை 9150572319 என்ற மொபைல் எண்ணுக்கோ அல்லது 9932080480 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவோ அனுப்ப வேண்டும்.