திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் நகரத்தில் மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சியரின் உத்தரவின்படி ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்று பாலம் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையை திருவெண்ணெய்நல்லூர் வருவாய் துறையினர் மூடி அங்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களை தினந்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்புக்காக பணியமர்த்தி வருகின்றனர். இதில் பாலத்தின் ஒருபுறம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவிலும், மறு புறம் விழுப்புரம் தாலுகாவிலும் உள்ளதால் தற்போது ஒரு புறம் மட்டும் மூடப்பட்டு, விழுப்புரம் தாலுகா பகுதியில் உள்ள மறுபுறம் திறந்து கிடக்கிறது.