மதுரை: கொரோனா ஊரடங்கு நேரத்தில் வாகனங்களுக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் மட்டுமே வழங்கி வரும் நிலையில், மதுரையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் வாகன பாஸ் வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் மட்டுமே, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்வுக்கு செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, இதற்கான அனுமதியைப் பெறலாம். இந்த அனுமதியை மாவட்ட நிர்வாகமே வழங்குகிறது. இதற்கென தாசில்தார் ஒதுக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் பணிகள் நடந்து வருகிறது.