கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்க ஒரு ஏழைப்ெபண் தனது கால் கொலுசை தானம் செய்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொண்ணேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் கவிபிரியா (22). இவருக்கு தாய் இல்லை. தந்தை மட்டும் உள்ளார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், அருகில் உள்ள மில் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அன்னூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மக்களுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கபசுர குடிநீர் (நோய் எதிர்ப்பு சக்தி பானம்) விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்த்த கவிபிரியா, தனது பங்களிப்பாக ஏதேனும் ெசய்ய வேண்டும் என விரும்பினார். அதன்படி, தனது தந்தையின் அனுமதி பெற்று, தனது கால் கொலுசு இரண்டையும் கழற்றிக்கொடுத்தார்.