சென்னை: அகலவிலைப்படியை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டிருப்பதற்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஆசிரியர், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசை பின்பற்றியே தமிழ்நாடு அரசும் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது வருந்தத்தக்கது. இதனால் ஓய்வூதியம் பெறுவோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள்.