ராஜபாளையம்: ராஜபாளையம் சஞ்சீவி மலையில் பற்றிய தீயை தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் அணைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் உள்ளது சஞ்சீவி மலை. கடந்த 10 நாட்களாக கொளுத்தி வரும் கடும் வெயிலின் காரணமாக மலைச்சரிவில் வளர்ந்துள்ள கோரைப்புல் உள்ளிட்ட முட்புதர்கள் காய்ந்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் சஞ்சீவி மலையில் திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து அதிகரித்த காற்றினால் தீ மலை உச்சிக்கு பரவ தொடங்கியது. தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான 10 வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.