மத்திய குழுவுக்கு ஒத்துழைப்பு,..மம்தா பானர்ஜி திடீர் பல்டி

மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு, மருத்துவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவைகளுக்கு இடையேயான 6 குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர், உள்துறை அமைச்சரிடம் விளக்கம் கோரிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று உள்துறை செயலர் அஜய் பல்லாவுக்கு எழுதிய கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை அமல்படுத்த ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதியளிப்பதாக கூறியுள்ளார்.

Related Stories: