சின்னமனுர்: சின்னமனூர் அருகே, ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் யானைகள் கூட்டமாக முகாமிட்டிருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேருராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியார், மகராஜன் மெட்டு, இவங்கலாறு என 7 மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 13 ஆயிரம் ஏக்கரில் தேயிலை, ஏலம், காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், மேகமலை வனஉயிரின சரணாலயத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் யானைக் கூட்டங்கள் அதிகமாக உள்ளன.