திருச்சி: தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். தற்போது போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்பட அனைத்து பிரிவு போலீசாரும் கொரோனா தொற்று ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேரம் பணி 3 ஷிப்ட் முறையில் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் பணிபுரிய வேண்டும். பின்னர் ஒரு வாரம் அவர்களுக்கு விடுமுறை என்ற திட்டத்தை டிஜிபி திரிபாதி அமல்படுத்தியுள்ளார். புதன் முதல் செவ்வாய் வரை ஒரு வாரம் என குறிப்பிடப்பட்டு பணி ஒதுக்கப்பட்டுள்ளது.