சேலம்: சேலத்தில் ட்ரோன் கேமராவை கண்டதும், ஏரியில் மீன்பிடித்த இளைஞர்கள் தலைதெறிக்க ஓடும் வீடியோவை வெளியிட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பொதுமக்களின் நடமாட்டம் பல இடங்களில் காணப்படுகிறது. அத்துடன், இளைஞர்கள் ரகசிய இடத்தில் கூடி சமைத்து சாப்பிடுவது, சூதாடுவது, கிரிக்கெட், கேரம், கோலி ேபான்ற விளையாட்டுகளை விளையாடுவது என தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து வானத்தில் வட்டமிடும் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி, இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சேலம் குரங்குச்சாவடி மலையடிவாரத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்களை ட்ரோன் கேமரா மூலம் கண்டுபிடித்து போலீசார் எச்சரித்தனர்.