திமுக இளைஞர் அணி சார்பில் 500 துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசி, மளிகை பொருட்கள்: செங்கல்பட்டு எம்எல்ஏ வழங்கினார்

செங்கல்பட்டு: திமுக இளைஞர் அணி சார்பில், திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், 500 துப்புரவு தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினார். மறைமலைநகர் நகர திமுக இளைஞர் அணி சார்பில் மறைமலைநகர் நகராட்சியில் தினக்கூலியாக வேலை செய்யும் துப்புரவு பணியாளர்கள் 500 பேருக்கு அரசி, மளிகை பொருட்கள், காய்கறி பொருட்கள் வழங்கும் விழா, அரசு பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் டி.கே.கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் பாலு, கிருஷ்ணகுமார், நித்தயானந்தம், கார்த்திக், வருண்குமார், கிஷோர் அகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 500 நகராட்சி துப்புரவு தினக்கூலி பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் போட்டு நன்றாக கழுவவேண்டும் என அறிவுறுத்தினார்.

Related Stories: