ஆவடி: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருகிறது. மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு தலா ₹1000 நிவாரண உதவி வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, ஆவடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளை கண்டறிந்து 104 பேருக்கு வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள சாலையோர வியாபாரிகள் விபரம், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள இயலாத நிலை உள்ளது.