உத்திரமேரூர்: உத்திரமேரூரில் 1156 இருளர் மற்றும் நறிகுறவ குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் பொருட்களை, திமுக எம்எல்ஏ, எம்பி ஆகியோர் வழங்கினர். கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 144 தடை அமலில் உள்ளது. இதையொட்டி உத்திரமேரூர் அடுத்த பெருநகர், உள்ளம்பாக்கம், நாஞ்சிபுரம், வினோபாநகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் குடும்பங்கள், மானாம்பதி, வயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள நறிகுறவர்கள் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் 1156 இருளர் மற்றும் நறிகுறவர் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை நேற்று வழங்கினர்.