இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் உணவு கிடைக்காமல் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள் வழியில் போவோரை கடித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் நேற்று மட்டும் 22 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இந்தூர் நகரில் நாய்கடிக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக, சராசரியாக நாளொன்றுக்கு 50 ஆக அதிகரித்துள்ளது.