சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் ேநற்று வரை ஊரடங்கு உத்தவை மீறியதாக மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 477 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1 லட்சத்து 75,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 39,008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அபராத தொகையாக 68 லட்சத்து 57,344 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.