சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்று சென்னையில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மறுபக்கம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 44 பேர் குணமடைந்துள்ளனர். இதில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி சில நாட்களுக்கு முன்பு குணமடைந்தார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.