விழுப்புரம்: டாடி, மம்மி மருத்துவமனையில் பணியாற்றுவதால் பொதுமக்களே பாதுகாப்பா இருங்க என வீட்டில் தனியாக இருக்கும் சகோதரிகள் உருக்கமாக பேசி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் முகையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர்கள் ஜோஸ் பிரேம் குமார். அவரது மனைவி வித்யாதேவி. மருத்துவர்களான இவர்கள் இருவரும் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு மருத்துவ சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மகள்கள் ஜாப் ரியா ஆட்லின் பிரீட்டி, ஜோயல் நியோமி. இருவரும் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர்.