சென்னை: ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் கொரோனா நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் விதமாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ₹50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. கூடுதலாக ஜிஆர்டியின் ரீடெய்ல் ஸ்டோர் பணியாளர் உணவகம் மூலமாக மார்ச் 26ம் தேதி முதல் தினசரி 2500 பேருக்கான உணவை வெளிமாநில தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சேவையை விரிவாக வழங்கும் வகையில் ஜிஆர்டி ஓட்டல்ஸ் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு தயாரித்து, நலிந்த நிலையில் உள்ளோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைப்பினருக்கு வழங்கப்படுகிறது.